விளையாட்டு

இன்றுடன் ஓய்வு பெறுகிறாரா தோனி?

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஐ.பி.எல் தொடரிலிருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.பி.எல் 2025 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் கடந்த மார்ச் 22 அன்று தொடங்கின. 74 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் வருகிற மே 25 வரை நடைபெறவுள்ளன.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணியும் டெல்லி கெப்பிடல்ஸ் (டி.சி) அணியும் விளையாடி வருகின்றனர்.

இந்தப் போட்டியே சி.எஸ்.கே அணியின் முன்னாள் கெப்டன் மகேந்திர சிங் தோனியின் கடைசி போட்டியாக இருக்குமென்றும் இத்துடன் அவர் ஓய்வை அறிவிக்கவுள்ளதாகவும் வெளியான தகவல்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் காயம் காரணமாக கெப்டன் ருதுராஜ் விளையாடமாட்டார் என்றும் அணியை தோனி வழிநடத்துவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், போட்டி ஆரம்பிக்கையில் ருதுராஜே கெப்டனாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முந்தைய ஐ.பி.எல் தொடரிலேயே ஓய்வை அறிவிக்காமல் விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே ஐ.பி.எல் விளையாடுகிறார் என்று தோனி மீது சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலிருந்து முன்னரே ஓய்வுபெற்ற மகேந்திர சிங் தோனி இன்று ஐ.பி.எல் தொடரிலிருந்து தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய அதிகாரபூர்வ செய்திகள் எதுவும் வெளிவரவில்லை.

மேலும், தோனியின் பெற்றோர் முதல்முறையாக நேரில் அவர் விளையாடும் போட்டியைக் காண வந்துள்ளனர். இது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *