உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் : 18 பேர் பலி!

உக்ரைன் ஜனாதிபதியின்  சொந்த ஊரில் ரஷ்ய  நடத்திய தாக்குதலில் 9 குழந்தைகள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைன்,ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். அதன் முக்கிய கட்டமாக அமெரிக்கா முன்மொழிந்துள்ள 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இருநாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

இந் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்ய படைகள் திடீரென ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளன. உக்ரைன் ஜனாதிபதியின் சொந்த ஊராக கிரிவ்வி ரிக் பகுதியில் நடைபெற்ற ஏவுகணைத்  தாக்குதலில் 9 குழந்தைகள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 61 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு கொடூரமான தாக்குதல் என்றும் அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *