உலகம்

தாய்வானில் மீண்டும் நிலநடுக்கம்

தாய்வான் தலைநகர் தைபேயில் நேற்று நள்ளிரவு 11.35 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் தைபே மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

ஏற்கனவே கடந்த 3 ஆம் திகதி தாய்வானின் ஹூவாலியன் நகருக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *