விளையாட்டு

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

சென்னை அணிக்கு ஆரம்ப வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ஓட்டங்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ஓட்டம் ஏதும் அடிக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

ரவீந்திர ஜடேஜா 2 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை குவித்தது. 

பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில் 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் அணி 17.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *