ஏடன் வளைகுடாவில் பயணித்த 3 கப்பல்கள் மீது ஹவுதி படை ஏவுகணைத் தாக்குதல்
ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்த 3 கப்பல்கள்மீது ஹவுதி கிளர்ச்சிப் படையினர் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களில் இதுவரை 34,904 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 78,514 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் பலஸ்தீனத்துக்கு எதிரான போரை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கடல், ஏடன் வளைகுடா பகுதியில் பயணிக்கும் கப்பல்களை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 07ஆம் திகதி ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்த 3 கப்பல்களை குறிவைத்து ஹவுதி படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுவரை சேத விபரங்கள் எதுவும் வெளியிடப்படாதநிலையில் ஏடன் வளைகுடா பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.