வணிகம்

தலவத்துகொடையில் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ள Prime Lands

சொகுசு வீடமைப்பு மற்றும் வாழ்க்கை முறைகளை மேம்படுத்தலில் புதிய யுகத்தை ஆரம்பிக்கும் வகையில், ரியல் எஸ்டேட் துறையின் முன்னோடியாக அமைந்துள்ள Prime Lands (Pvt) Ltd தலவத்துகொட, சமகி மாவத்தையில் தனது புதிய வீடமைப்புத் திட்டமான ‘The Residence இன் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய வீடமைப்புத் தொகுதியின் நிர்மாணப் பணிகளின் ஆரம்பத்தைக் குறிக்கும் அடிக்கல் நாட்டு வைபவத்தில், நிறுவனத்தின் தவிசாளர், இணைத் தலைமை அதிகாரி, வீட்டு உரிமையாளர்கள் மற்றும் Prime அணியினர் என பலரும் கலந்து கொண்டனர்.

வீட்டு உரிமையாளர்களின் பிரத்தியேகமான தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய வகையில் விசேட கொடுப்பனவு திட்டத்தை இந்தத் நிர்மாணத்திட்டம் கொண்டுள்ளது. Prime Group இனால் புரட்சிகரமான 1% மாதாந்த தவணைக் கொடுப்பனவுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முதன் முறையாக ‘The Residence’ வீடமைப்புத் தொகுதிக்காக வழங்கப்படுகின்றது. அதனூடாக இந்தத் திட்டத்தை அனைவராலும் அணுகக்கூடியதாக்கியுள்ளது. முக்கியமாக, புதிய திட்டத்தின் 80% க்கும் அதிகமான இல்லங்கள் ஏற்கனவே விற்பனையாகியுள்ளன.

The Residence வளாகத்தில் இல்லமொன்றில் முதலீடு செய்வது என்பது சிறந்த வாழிட அனுபவச் சூழலை வழங்குவது மாத்திரமன்றி, நகரின் வசதிகள் மற்றும் இயற்கைசூழல்கள் போன்றவற்றின் சிறந்த பிணைப்பை வழங்குகின்றது. இதனூடாக, தலவத்துகொடையில் செளகரியம் மற்றும் இலகுத் தன்மை போன்றவற்றை நாடுவோருக்கு சிறந்த தெரிவாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *