உள்நாடு

30 சீன பிரஜைகள் கைது

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 30 சீன பிரஜைகள் கைதுசெய்யப்பட்டனர்.

நீர்கொழும்பில் உள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்தபோதே குறித்த குழுவினர் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இணையம் ஊடாக நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக அவர் கூறுகிறார்.

இதேவேளை, நேற்று (28) வரை ஒன்லைனில் பணமோசடி செய்த குற்றச்சாட்டில் 137 இந்திய பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து பல மடிக்கணினிகளும் கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *