உள்நாடு

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.ஏ.எம்.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

விசேட பாதுகாப்பிற்கு மத்தியில் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி அரசு அச்சகத்தில் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், வாக்குச் சீட்டின் நீளம் சுமார் 27 அங்குலமாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ராம் எல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *