உள்நாடு

வாதுவ பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பொது மக்கள் போராட்டம்

வாதுவ பொலிஸார்  வாகன விபத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரை தாக்கி கொன்றதாகக் கூறி கிட்டத்தட்ட 40 பேர் பொலிஸாருக்கு முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஆர்.எம். சமித டில்ஷான் என்ற 24 வயதுடையவர் ஆவார்.

மேலும் அப்பாவி குழந்தைகளின் குடும்பங்கள் சீரழிகின்றன. சவப்பெட்டியை வாங்கக்கூட பணம் இல்லை எனக் கூறி போரட்டம் நடத்தியவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வாதுவ பொலிஸாரின் பிரதான நுழைவாயில் வீதித் தடைகளினால் முற்றாக அடைக்கப்பட்டிருந்ததுடன் கிட்டத்தட்ட 20 அதிகாரிகள் கொண்ட குழு பிரதான வீதியை மறித்து பாதுகாப்பை பலப்படுத்தியது.

வாகன விபத்து தொடர்பில் வாதுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பும் போது இரத்த வாந்தி எடுத்துள்ளதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த  ரோஷினி லக்மாலி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் பின்வருமாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் வாகன விபத்தில் சிக்கிய பின்னர் வாத்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பல மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி  ரோஷினி லக்மாலி பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு வந்து முறைப்பாடு செய்த பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

என் கணவர் ஒரு கார் விபத்துக்காக கைது செய்யப்பட்டு சில மணிநேரங்களில் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். பொலிஸார் என்னை தடியடியால் கடுமையாக தாக்கியதாகவும், நெஞ்சு வலிக்கிறது என்றும் கணவர் கூறினார்.

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பின்னர் இன்று இறந்துவிட்டதாக கூறினார். நானும் இந்த அப்பாவி குழந்தையும் தனியாக இருந்தோம். எங்களுக்கு நீதி வழங்குங்கள் என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *