உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு : 9 சுரங்கத் தொழிலாளர்கள் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான்  மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது வீதியோரமிருந்த வெடிகுண்டு வெடித்ததில்  9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு 7 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள  வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

 இந்த துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பலூசிஸ்தான் அரசாங்க செய்தி தொடர்பாளர் இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *