உள்நாடு

மேம்பாலத்திற்கு கீழிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

அங்குனுகொலபெலஸ -அபேசேகரகம வீதியின் கீரியகொடெல்ல சந்தியின் அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் இளைஞனொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டு மேம்பாலத்திலிருந்து கீழே வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 இவ்வாறு உயிரிழந்தவர் அபேசிங்க விஜேநாயக்க சந்தீப லக்ஷன் என்ற 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *