உள்நாடு

செங்கலடியில் மோட்டார் குண்டு ஒன்று மீட்பு!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றின் காணியில் நிலத்தில் புதையுண்டிருந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்றை நேற்று (12) மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள முதலியார் நீதிமன்ற வீதியிலுள்ள வெளிநாட்டில் வசித்து வரும் ஒருவரின் காணி ஒன்றினை பராமரித்துவரும் ஒருவர் நேற்று குறித்த காணியை சுற்றி துப்பரவு செய்யும்போது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டார் கண்டு ஒன்றை கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் குண்டை மீட்டு செயலழிக்க வைப்பதற்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *