சாதாரணத் தரப்பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை (17) நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 3,663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு 474,147 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.
மேலும், அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும் என்றும் பரீட்சை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பரீட்சையில் முறைகேடுகளைக் குறைப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர மேலும் தெரிவித்தார்.