உள்நாடு

அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டுவரப்பட்ட தேக்கு மரப்பலகைகள் மீட்பு


அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமாக வாகனத்தில் மறைத்து கொண்டுவரப்பட்ட    தேக்கு மரப்பலகைகளை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது

அத்துடன் குறித்த தேக்கு மரப்பலகைகளை கடத்துவதற்கு பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தில்  சம்மாந்துறை 03 பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரும் சம்மாந்துறை பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *