உள்நாடு

அஞ்சல் ஊழியர்களின் திடீர் தீர்மானம்.

அஞ்சல் ஊழியர்கள் நாளை (08) மற்றும் நாளை மறுதினமும் (09) 48 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், இன்று (07) மாலை 04 மணி முதல் மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தில் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஏனைய அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இன்று (07) நள்ளிரவு முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிந்தக பண்டார குறிப்பிட்டார்.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *